Thursday, May 22, 2008

வஜ்ராசனம்



வஜ்ராசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உடல் பலப்பட்டு உறுதியாகும். சமஸ்கிருதத்தில் ‘வஜ்ரா’ என்றால் ‘வைராக்கியமானவன்’ என்று பொருள். யோகத்தைப் பயிற்சி செய்பவர் வஜ்ராசனத்தில் இருக்கும் போது அவ்வாறு தெரிவதால் இப்பெயர் வந்தது.





செய்முறை :


சாதாரணமாக நாம் அமரும் சுகாசனத்தில் அமரவும்நிமிர்ந்து நேராக உட்காரவும்இரண்டு கால்களையும் நேராக நீட்டவும்இரண்டு கால்களையும் ஒவ்வொன்றாக மடக்கி, கால் முட்டி தரையில்பட அமரவும்பாதங்கள் மேல் நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டும்இரண்டு பாதங்களும் மேல் நோக்கிய நிலையில், அவைகளுக்கிடையே புட்டங்கள் தரையில் பட அமரவேண்டும்கால்களின் இரண்டு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று பார்த்த நிலையில் இருக்க வேண்டும்கால் முட்டிகள் இரண்டும் எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அருகருகே இருத்தல் வேண்டும்உள்ளங்கையை தொடையில் வைத்திருக்க வேண்டும்பார்வை நேராக இருத்தல் வேண்டும்இந்த ஆசணத்தை செய்து முடிக்கும் வரை மேலுடல் நேராக இருத்தல் வேண்டும்





வஜ்ராசனத்தின் மற்றொரு முறையிது


கால்கள் இரண்டையும் மடக்கி இரு பக்கங்களிலும் பாதங்கள் தெரிய அமர்வதற்கு பதிலாக, அவைகளை அருகருகில் வைத்து அவைகளின் மீது புட்டங்கள் வைத்தும் அமரலாம்.இரண்டு கால்களின் பாத விரல்கள் ஒன்றன் மீது ஒன்று பதிந்துள்ள நிலையில் நேராக அமரவேண்டும்.பாதங்களின் உட்பகுதியில் புட்டங்கள் தொட்டுக்கொண்ட நிலையில் அமரவேண்டும்.இவ்விரண்டு நிலைகளிலும் சுவாசம் ஒன்றுபோல்தான் இருக்கும்.
பயன்கள்
தொடை தொங்கு சதைகள் குறையும்.முதுகுத் தண்டிற்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.அடி வயிற்று உறுப்புகள் அவைகளுக்குரிய இடத்தில் சரியமைந்திருக்கும்.முதுகுத் தண்டையொட்டியுள்ள தசைகள் உறுதியாகி பலம் பெறும்.வயிற்றிற்குக் கீழ் உள்ள பகுதி பலப்படும்.இறுகியிருக்கும் தசை நாறுகள், பாத எலும்புகள், கணுக் கால்கள், கெண்டைக் கால் தசைகள், தொடை தசைகள், இடுப்பு ஆகியன தளர்ந்திடும்.

எச்சரிக்கை :உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.




பயன்கள்:


தொடை தொங்கு சதைகள் குறையும்.முதுகுத் தண்டிற்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.அடி வயிற்று உறுப்புகள் அவைகளுக்குரிய இடத்தில் சரியமைந்திருக்கும்.முதுகுத் தண்டையொட்டியுள்ள தசைகள் உறுதியாகி பலம் பெறும்.வயிற்றிற்குக் கீழ் உள்ள பகுதி பலப்படும்.இறுகியிருக்கும் தசை நாறுகள், பாத எலும்புகள், கணுக் கால்கள், கெண்டைக் கால் தசைகள், தொடை தசைகள், இடுப்பு ஆகியன தளர்ந்திடும்.

மச்சாசனம்

மச்சாசனம் என்ற யோகாசனம் செய்பவர் மீன் நீந்துவது போன்ற நிலையில் இருப்பார். மச்சம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மீன் என்ற பொருளும் உண்டு. ஆம்! இந்த மீன் நிலையில் நீரில் நாம் இருந்தால் கை கால் உதவியின்றி அப்படியே மிதக்க முடியும். அதனால்தான் இது மச்சாசனம் என்று பெயர் பெற்றுள்ளது.செய்யும் முறை:பத்மாசனத்தில் உட்காருவதுபோல் உட்காரவேண்டும். உங்கள் முழங்கால்கள் தரையில் படுமாறு இருக்கவேண்டும்.முழங்கைகளைக் கொண்டு மெதுவாக பின்னால் சாயவேண்டும்பிறகு அப்படியே முதுகு கீழே பட படுக்கவேண்டும்.
இந்த நிலையை மேற்கொள்ளும்போது உங்கள் கைகள் மற்றும் முழங்கைகளை ஆதரவிற்கு பயன்படுத்திக் கொள்ளவும்.கைகளை பின் பக்கமாக தலையை நோக்கி கொண்டு வரவேண்டும்.இப்போது உள்ளங்கைகளை அப்படியே தரையில் படுமாறு வைக்கவும்.உங்களின் அந்தந்தந்த தோள்களுக்கு இணையாக கைகள் எதிர் முகமாக இருக்கவேண்டும்.உள்ளங்கைகளையும் முழங்கால் முட்டிகளையும் கீழ் நோக்கி அழுத்தவும்.உங்கள் வயிறு மற்றும் மார்பையும் முன்னோக்கி இரு‌த்தவும்.இடுப்பு, முதுகு, தோள்களை தரையிலிருந்து உயர்த்தவும்.உங்கள் உடலை கைகள் தாங்கவேண்டும். முதுகுத் தண்டை வளைக்கவும்இதே நேரத்தில் உங்கள் கழுத்து, தலையை பின்புறமாக நன்றாக வளைக்கவும்.

சர்வாங்காசனம்

சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம். சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுகிறது. அதாவது உடல் முழுதும் பயிற்சியில் ஈடுபடும் முறைதான் சர்வாங்கசனம்.செய்முறை :1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்துப் படுக்கவும். கைகளை நிதானமாக உங்கள் பக்கவாட்டில் விரிப்பில் சாதரணமாக வைத்துக் கொள்ளவும்.
2. கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும், இப்போது உள்ளங்கைகளை அழுத்தி இடுப்பை பூமியிலிருந்து உயர்த்தி கால்களை பூமியை நோக்கி முன்புறமாக கொண்டு வரவும்.3. கைகளை மடக்கி உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து கால்களை ‌‌மீ‌ண்டு‌ம் 90 டிகிரிக்கும் உயர்த்த வேண்டும். உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்படி உடல் பளுவை தோள்பட்டைகளில் வைத்து சரி செய்ய வேண்டும். கை முட்டிகள் தரை மீது இருக்க வேண்டும்
50 அல்லது 100 எண்ணிக்கைகள் அப்படியே ஆடாமல் இருக்க வேண்டும். கண்கள் திறந்து கால் விரல்களை பார்க்க வேண்டும்.6. கால்களை பூமியை நோக்கி பின்புறமாக கொண்டு வந்து முதுகிலுள்ள கையைப் பிரித்து விரிப்பின்மீது மெதுவாக முதுகை வைத்து படுத்து கால்களை விரிப்பின்மீது வைக்க வேண்டும்.பலன்கள் :இந்த ஆசனத்தால் தொண்டைப் பகுதிக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால் தைராய்டு சுரப்பி ஒழுங்காக வேலை செய்ய ஏதுவாகிறது. இரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம், உடல் கழிவை வெளியேற்றும் மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படுகிறது. கிட்னி கோளாறுகளை சரி செய்வதுடன் சிறுநீர் கோளாறுகளையும், இரத்தமின்மை வியாதியையும் போக்குகிறது. இரத்தத்தை சுத்தம் செய்கிறது. தோல் வியாதிகள் விரைவில் குணமாகும். காது, மூக்கு, தொண்டை கோளாறுகளை சரி செய்கிறது. உடல் எடையை குறைக்கிறது. அதுபோல் குறைந்த உடல் எடையை போதுமான அளவு கூட்டுகிறது. முகத்தில் தோல்களில் ஏற்படும் சுருக்கங்கள், கிழத்தோற்றம், விரைப்பு ஆகியவற்றை போக்கி இளமையைக் கூட்டுகிறது.
தலைமுடி கொட்டுவதையும், இளநரையையும் போக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. ஆஸ்துமா மூக்கடைப்பு, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், குடல்வால்வு நோய், மலச்சிக்கல், குடல் இறக்கம் எனும் ஹிரணியா, சர்க்கரை வியாதி, வெரிக்கோய்வெயின் எனும் கால் நரம்பு முடிச்சு வியாதிகள், தூக்கமின்மை, குதிகால் வலி மற்றும் பாதம் சம்பந்தப்பட்ட நோய்களை விரைவில் குணம் செய்யும். எச்சரிக்கைகள் :உயர் ரத்த அழுத்தம் உள்ள போது இந்த ஆசனத்தை செய்வது உசிதமல்ல.கழுத்து, தோள்பட்டை, கீழ் முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் கோளாறுகள் இருக்கும்போதும் இந்த ஆசனத்தை செய்வது நல்லதல்ல.முக்கிய குறிப்பு: மாதவிடாய் தருணத்தில் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.